பக்ரித் ஸ்பெஷல் கவிதைகள்!
ADVERTISEMENTS
உன் இசைவின்றி...
திரும்பும்திசையெங்கும் இருப்பவனேவிரும்பும்விஷயத்தைகொடுப்பவனேஉன்இசைவின்றி ஓர்இலையும் அசையாதேஉன் ஆசையின்றி ஓர்மனமும் பிசையாதே...உன்னை நாடிஉண்மை தேடிவருவோர் கோடி...நானும் வரவேநாளும் அழுதுகேட்டேன் பாடி...இம்மையில்கண்டு விட்டால்உன் இல்லம்...மறுமையில்குளிர்ந்திடுமே...என் உள்ளம்...- என். ரபீக் அஹ்மத்
ஷைத்தான் தோற்றான்...
இறைவனின் தூதர்இப்ராஹீம் நபிஇவ்வுலகில் கட்டிய முதல்இறை இல்லம்...கனவில் கேட்டஇறைவனின் குரலுக்குதன்கண்மணி மகனையேஅறுக்க துணிந்தநம்பிக்கைகருணைமிக்க இறைவன்நபியின்நதிபோன்றநம்பிக்கையை ஏற்றான்.களங்கப்படுத்தகாத்திருந்தஷைத்தான் அன்றே தோற்றான்.நமக்குநிறமில்லை...மொழியில்லை...தேசமில்லை....எல்லைகளை மறந்துஎல்லாம் வல்லஇறைவனைநாடிச் செல்வோம்!நாவெல்லாம் அவன்புகழ்பாடிச் செல்வோம்!- எஸ். முஹம்மத் தமீம்
மனிதரில் புனிதர்...
ஆதியும் நீ...அந்தமும் நீ...எங்களுக்குஎல்லா சொந்தமும் நீ...உன்உன்அன்புக்குஎல்லையில்லை...உன்அருளிருந்தால்தொல்லையில்லை...எங்கள்கண்ணீரைபன்னீராக மாற்றுபவனே...எங்களைமனிதரில்புனிதராக மாற்று...எங்கள்அழுக்கு எண்ணங்களை...ஆடம்பரத்தை...அகம்பாவத்தை...நாம் இந்ததியாகத் திருநாளில்அறுத்து எறியஎங்களுக்குவழிகாட்டு!- ரஹ்மதுல்லா
நேர்வழி
இருட்டில்அலையும்குருடராய் இருந்தோம்...திருமறைநமக்கு விழியானது...ஆமைக் கூட்டத்தில்ஊமையாய் இருந்தோம்...நபி மொழிநமக்கு மொழியானது..செல்லும் பாதைநேர்வழியானது...சேரும் இடம்அழகானது...பசி, பஞ்சம், பட்டினிஒரு பக்கம்தேவைக்கு மீறியசெல்வம்மறுபக்கம்நியாயமற்றஇந்த நிலைமாறஇறைவன் தந்ததியாகத் திருநாளைஏழையுடன் சேர்ந்துகொண்டாடுவோம்...இருப்பதைஇல்லாதவருடன்பகிர்ந்து பசியாறுவோம்!-கே. பாரூக் அஹ்மத்
ADVERTISEMENTS
ADVERTISEMENTS