பஜனையில் கேட்டதுண்டா?
ADVERTISEMENTS
உங்கள் ஊரில் நடக்கும் ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகளுக்கு செல்கிறீர்கள். அது ராமனை பற்றிய சொற்பொழிவாக இருந்தால் ஸ்ரீஜானகி காந்த ஸ்மரணம் என்று சொற்பொழிவாளர் ராகத்துடன் சொல்வார். உடனே சுற்றியிருப்பவர்கள் ஜெய் ஜெய் ராமா என்பார்கள். கிருஷ்ணரை பற்றிய சொற் பொழிவாக இருந்தால், ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்றோ, கோபிகா ஜீவன் ஸ்மரணம் என்றோ சொல்வார். அப்போது, சுற்றியிருப்பவர்கள் கோவிந்தா கோவிந்தா! என்பார்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஆன்மிக சொற்பொழிவுகளில் கலந்து கொள்பவர்கள். பேச்சு துவங்கும் முன் பலவிதமான உலக நினைவுகளில் இருக்கலாம். அவர்களுக்கு இறைச்சிந்தனையை ஊட்டவே இவ்வாறு செய்யப்படுகிறது. தங்களுக்கு இறைவனின் நினைவு வந்துவிட்டதாக ராமா என்றோ, கோவிந்தா என்றோ சொல்லி நாங்கள் இறைநிலைக்கு வந்துவிட்டதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள். மேலும் இந்த நாமங்கள் எத்தகைய இன்னல்களையும் தீர்க்கவல்லவை. பாஞ்சாலி கோவிந்தா என அலறியபோது, கண்ணன், அவளது மானத்தை காப்பாற்றியதில் இருந்தே இதை தெளிவாக அறியலாம்.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS