பெரும்பாலான நதிகளுக்கு பெண் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது ஏன்?
ADVERTISEMENTS
நமது சாஸ்திரங்கள் கடலை ஆணாகவும், நதிகளை பெண்ணாகவும் போற்றுகின்றன. பெண் மென்மையானவள். அனைவரையும் அரவணைத்து, அந்தக் குடும்பத்தார் அனைவரின் நலனுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பவள். சூரியனால் கடல் நீரானது நீராவியாகி, மேகங்களின் வாயிலாக மழையாகப் பெய்து, அவை நதிகளின் மூலம் ஊர்மக்கள் பயனடைய வளைந்து மெலிந்து ஓடி, கடைசியில் கடலிலேயே நதிகள் சங்கமிக்கின்றன. இது போன்று பெண்ணானவள் ஒரு குடும்பம் நன்றாக இருக்க விட்டுக்கொடுத்து, புரிந்துகொண்டு, தியாகம் செய்து வாழ்கிறாள். அவள் எவ்வளவு தியாகம் செய்திடினும், முடிவில் தனது கணவன் இன்னார், இன்னாரின் மனைவியே தான் என்பதிலேயே பெருமை கொள்கிறாள். வளர்ச்சிக்கு வித்தாக பெண்களும் நதிகளும் விளங்குவதினால். நதிகள் கங்கா, காவிரி, யமுனா என்று பெண்பால் சொற்களாலேயே சிறப்பிக்கப்படுகின்றன. உலகம் இன்று இருப்பது பெண்களால்தான்! அதுபோன்று, நதிகளே ஒரு தேசத்தை உயர்ந்ததாக ஆக்குகின்றன. பெண்கள் இணைந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு வளர்ச்சி என்பது போன்று. நதிகள் அனைத்தும் இணைந்தால் நமது நாடும் வளம்பெறும்.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS